பொதுவான குற்றவாளியை காட்டிலும் தாம் மோசமாக நடத்தப்படுவதாக கொழும்பில் உள்ள கடற்படைத்தளத்தில் கடந்த 6 வார காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று, அனுப்பிய கேள்விக்கொத்துக்கு சரத் பொன்சேகா அனுப்பியுள்ள பதிலில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடற்படைத்தளத்தில் சரத் பொன்சேகா, சொகுசான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையிலேயே சரத் பொன்சேகாவின் இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.