வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி செயலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி செயலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜனவரி, 2011

தீர்வு தொடர்பான அரசு-தமிழ்க்கூட்டமைப்பு இணைந்த குழு திங்களன்று சந்திக்க தீர்மானம்

ரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திக்கவுள்ளது.

திங்கள், 17 மே, 2010

ஜி - 15 நாடுகளின் தலைமை பதவி ஜனாதிபதியினால் பொறுப்பேற்பு



ஜி - 15 நாடுகளின் தலைமைப் பதவி சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பொறுப்பேற்கப்பட்டது. ஈரானிய ஜனாதிபதி அஹமதி நிஜாட்டினாலேயே இந்தப் பதவி கையளிக்கப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஜீ.எல்.பீரிஸ். மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டிசில்வா வெளிநாட்டு அமைச்சுக்கு போட்டி

Clipart
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்தசமரசிங்க ஆகிய முன்னாள் அமைச்சர்கள் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சப் பதவியை எதிர்பார்த்துள்ள நிலையில் அந்த அமைச்சை நிமல் சிறிபால டிசில்வாவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 8 ஏப்ரல், 2010

ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் வாக்களித்தார்

  2010 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வாக்கினை அம்பாந்தோட்டை டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் பதிவு செய்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது

புதன், 24 பிப்ரவரி, 2010

கிளிநொச்சி நீதிமன்றம் மார்ச் முதல் ஆரம்பம் : ஜனாதிபதி செயலகம்


கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறவித்துள்ளது.

நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் கிளிநொச்சிக்கான மாவட்ட நீதிபதியாக எஸ். சிவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கிளிநொச்சி நீதி மன்றக் கட்டடப் பணிகள் முடிவடையும் வரை அவர் தற்காலிகக் கட்டம் ஒன்றில் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதி மன்ற அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களும் கிளிநொச்சியில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர். இது பின்னர் முல்லைத்தீவுக்கும் விஸ்தரிக்கப்படும்.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு தசாப்த காலமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிதிமன்றச் செயற்பாடுகள் ஸதம்பிதம் அடைந்திருந்தன. அங்கு புலிகளின் நீதி மன்றங்கள் இயங்கின.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கில் சிவில் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில் மேலும் பல நீதி மன்றங்களை வடக்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது