வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

ஜி - 15 நாடுகளின் தலைமை பதவி ஜனாதிபதியினால் பொறுப்பேற்பு



ஜி - 15 நாடுகளின் தலைமைப் பதவி சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பொறுப்பேற்கப்பட்டது. ஈரானிய ஜனாதிபதி அஹமதி நிஜாட்டினாலேயே இந்தப் பதவி கையளிக்கப்பட்டது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

ஈரானின் தெஹ்ரான் நகரில் தற்போது இடம்பெற்றுவரும் ஜி - 15 நாடுகளின் உச்சி மாநாட்டின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பதவி பொறுப்பேற்கப்பட்டது என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட 18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இம்மாநாட்டின்போது நாடுகளிற்கு இடையிலான நல்லுறவு, அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரம் சம்பந்தமாக கலந்துரையாடப்படுகின்றது.
ஜி - 15 நாடுகள் அமைப்பில் ஈரான் , அல்ஜீரியா ஆர்ஜென்டினா, பிரேசில் சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஜமைக்கா, கென்யா, நைஜீரியா, மலேசியா, மெக்ஸிக்கோ, பெரு, செனகல், இலங்கை மற்றும் சிம்பாவ்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’