வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

செவனகலை பிரதேசத்தில் கணவரை வெட்டிக்கொன்ற மனைவி கைது!


இரத்தினபுரி செவனகலை கெமுனுபுர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் தனது கணவனைக் கோடரியால் வெட்டிக் கொலைசெய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக செவனகலைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 28ம் திகதி மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கெமுனுபுர வாசியான 48வயதுடைய டி.ஏ.பியதாச என்னும் நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகளின்போது கணவன் மனைவிக்கிடையில் நீண்ட காலமாகவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் சம்பவதினம் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த மனைவி தனது கணவனைக் கோடரியால ;வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரியவருகின்றது.

புதன், 2 டிசம்பர், 2009

புத்தி சுவாதீனமற்ற இளைஞன் கொலையின் சாட்சிக்கு உயிர்ப்பயம்.


பம்பலப்பிட்டி கடற்கரையில் புத்தி சுவாதினமற்ற இளைஞன் ஒருவன் அடித்து கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட ஓருவர் பொலிஸாருக்கு எதிராக சாட்சியமளித்திருந்தார். குறிப்பிட்ட சாட்சி தனது உயிருக்கு பொலிஸாரினால் ஆபத்து ஏற்படலாம் என அச்சங்கொண்டுள்ளாக ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். பொலிஸார் ஏதாவது ஓரு விடயத்தை சோடித்து தன்னை சிறையில் அடைக்கலாம் அல்லது ஒப்பந்த கொலைகாரர்களின் உதவியுடன் தன்னை கொலைசெய்யலாம் என தான் அஞ்சுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 13 நவம்பர், 2009

கைகலப்பில் வர்த்தகர் பலி : சந்தேக நபர்கள் தலைமறைவு


ஹட்டன் புளியாவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத சிலரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட வர்த்தகர் கருப்பண்ணன் விஸ்வநாதன் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ தினம் வர்த்தகரின் மருமகன் பயணித்த லொறியில் வந்தோர், மதுபோதையில் லொறியினுள்ளே தாளம் போட்டுப் பாட்டுப்பாடி வந்துள்ளனர். இதைக் கண்ட வர்த்தகரின் மருமகன் அவர்களிடம் வாகனத்தைச் சேதப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதன்போது வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் வாகனம் புளியாவத்தையை அடைந்ததும் அதில் வந்தவர்கள் இறங்கிச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் பொல்லுகளுடன் வந்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தகரின் கடையின் முன் நின்று இவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதன்போது அவ்விடம் வந்த வர்த்தகரை பலமாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலமாக தாக்கப்பட்ட வர்த்தகர் மயக்க நிலையை அடைந்தவுடன் அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்துள்ளனர்.

பின்னர் வர்த்தகர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மயக்க நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

வெள்ளி, 6 நவம்பர், 2009

இரத்தினபுரி லெல்லுப்பிட்டிய கலவரத்தில் ஒருவர் கொலை


இரத்தினபுரி லெல்லுப்பிட்டியவில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரம் ஒன்றையடுத்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 39 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டவராவார்.

இது தொடர்பாக நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.

சனி, 31 அக்டோபர், 2009

பம்பலப்பிட்டிக் கடலில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதிக் கிரியை நாளை


பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

அவரது சடலம் களனி மலர்ச்சாலையில் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை, மாவலகம என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும் நாளை அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் சிவகுமாரனின் தந்தை பாலவர்ணன் தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸ் தரப்பில்,

"மேற்படி கொலை தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய கன்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கின்றது.

மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும். நீதிமன்ற உத்தரவையடுத்து, விசாரணைகள் தொடரும்" எனக் கூறப்பட்டது.

புதன், 30 செப்டம்பர், 2009

இலங்கையில் பணியாற்றிய இந்திய விமானி சடலமாக மீட்பு

இலங்கை விமான சேவைகள் நிறுவனம் ஒன்றில் விமானியாக பணியாற்றிய இந்திய நாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்கொழும்பில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜோய் ராமன் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள விமானியாவார்.

நீர்கொழும்பு, கனத்தை வீதியில் உள்ள அவரின் வீட்டின் மாடிப்படியில் இரத்த வெள்ளத்தில் விழுந்திருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் கொலையுண்டவர் அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலைக்கு வராததை அடுத்து வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்தே இறந்தவரின் சடலம் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்ற நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உபுல் ராஜகருண விசாரணை நடத்தினார்.

சம்பவத்தில் இறந்த விமானியின் அறையிலிருந்து இரத்தக் கறை படிந்த கத்தியொன்றும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த அறையில் இருந்த தண்ணீர் பாத்திரமொன்றில் இரத்தம் இருந்துள்ளது.

நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

அங்குலான இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 பொலிசார் விளக்கமறியலில்

அங்குலான பிரதேசத்தில் தடுப்புக் காவலில் இருந்த இரண்டு இளைஞர்களின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதிபதி இந்திகா கலிங்கவன்ச உத்தரவிட்டுள்ளார்.21 வயதுடைய தனுஸ்க உதய சாந்த மற்றும் அபோன்ஸ் ஆகியோர் மொரட்டுவ பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.அவர்கள் ரைபிள் துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மவுன்ட் லாவின்யா நீதிவான் ஹர்சா சேதுங்க தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இந்த கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மவுன்ட்லாவின்யா மற்றும் மொரட்டுவ ஆகிய இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த கொலைகள் தொடர்பில், முன்னாள் அங்குலான பொலிஸ் பொறுப்பதிகாரி பி. டீ . நியுடன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்து விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.