வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எரிக் சொல்ஹெய்ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எரிக் சொல்ஹெய்ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜூலை, 2012

இலங்கையில் என்னை கொல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது: எரிக் சொல்ஹெய்ம்


2000 ஆண்டில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது தன்னை படுகொலை செய்வதற்காக சில திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 25 மார்ச், 2011

'பேச்சுவார்த்தைப் பங்காளராக' செயற்படுவதற்கு தயார் : சொல்ஹெய்ம்

லங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் விசேட சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கை வருவார்

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

புதன், 3 பிப்ரவரி, 2010

எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது


ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எரிக் சொல்ஹெய்மினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய சொல்ஹெய்மிற்கு எவ்வித உரிமையும் கிடையாதென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈட்டிய வெற்றி குறித்த வாழ்த்து செய்தியில் அவர் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறும் சொல்ஹெய்ம் கோரியிருந்தார்.

எனினும் அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உள்விவகாரங்களில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.