வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கை அரசாங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை அரசாங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஆகஸ்ட், 2011

கொலைக் களத்திற்கு எதிராக லைஸ் அக்ரீட் அப்போன் (காணொளி இணைப்பு) _

னல் 4வினால் வெளியிடப்பட்ட 'கொலைக்களம்" காணொளிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் 'லைஸ் அக்ரீட் அப்போன்" என்ற காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பயங்கரவாத பட்டியலில் புலிகளை உள்ளடக்க, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை மீண்டும் விண்ணப்பம்

ரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.

புதன், 22 டிசம்பர், 2010

அடி மேல் அடி அடித்தால் அரசாங்கமும் நகரும்?

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முப்பதாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் நடத்தி வந்த போர் கடந்த வருடம் மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. நீண்டகாலமாக இழுபறிப்பட்ட இந்தப் போரை குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது

வெள்ளி, 19 நவம்பர், 2010

அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும் :அரசாங்கம்

ரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

வியாழன், 14 அக்டோபர், 2010

போலி வைத்தியசாலை-மருந்தகம் : முறைப்பாடு தெரிவிக்க விசேட தொ.இல.

நாட்டில் இயங்கிவரும் போலி தனியார் வைத்திய நிலையங்கள், போலி மருந்தகங்கள் போன்றவை தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் தெரிவிப்பதற்கு இலகுவாக தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வியாழன், 15 ஜூலை, 2010

அரச சேவையில் இரண்டாம் மொழி கட்டாயம்; அரசாங்கம் தீர்மானம்

அரச சேவையில் கடமையாற்றுபவர்களுக்கு இரண்டாம் மொழியைக் கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி முதல் அரச சேவையில் இணைந்தவர்கள் இரண்டாவது மொழியினைத் தெரிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதன், 7 ஜூலை, 2010

ஆர்ப்பாட்டம் செய்வது இலங்கை மக்களின் ஜனநாயக உரிமை- அரசாங்கம்

ஜனநாயக நாடு என்ற முறையில் மக்களுக்கு தமது கருத்துக்களைச் சொல்வதற்கும் குறித்த ஒரு விடயத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் உரிமை உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக் கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப் போவதில்லை- அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக் கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

திங்கள், 21 ஜூன், 2010

புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியா பயணம்;இலங்கை எச்சரிக்கை

Australia Flag clipart animatedசட்டவிரோதமாக படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் பயணித்திருப்பது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு, இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

புதன், 2 ஜூன், 2010

என்.டி.டி.வி. விவரணச் சித்திரம் : இலங்கை உயர் ஸ்தானிகர் கண்டனம்

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி. ஒளிபரப்புச் செய்த விவரணம் ஒன்றை வாபஸ் பெறுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளி, 14 மே, 2010

நாடு கடந்த அரசுக்கான உதவியை தவிர்க்குமாறு இலங்கை கோரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதரவாளர்களினால் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் மற்றும் ஏனைய உதவிகளை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

வெள்ளி, 7 மே, 2010

அமிதாப்,ஐஷ்வர்யா ராய்,ஷாருக்கான் ஆகியோருக்கு முத்திரைகள் வெளியிட இலங்கை அரசு ஏற்பாடு


இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தித்திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,ஐஷ்வர்யா ராய் ஆகியோருக்கு இலங்கை அரசாங்கம் முத்திரைகளை வெளியிடவுள்ளதாக இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனி, 13 பிப்ரவரி, 2010

வன்னியில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிகாரி தெரிவித்த தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் கொழும்புக்கான பேச்சாளர் கோடன் வைஸ் வெளியிட்ட தகவலை, இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார். கோடன் வைஸ், ஏபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே தமது தகவலை நம்பத்தகுந்த தரப்புக்களை கோடிட்டு வெளியிட்டிருந்தார்.

இதனை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை பிழையான வழியில் இட்டுசெல்லும் செய்தி எனக்கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை மறுத்துள்ள லக்ஸ்மன் ஹுலுகல்ல, இவ்வளவு தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு பொதுமக்களை சித்திரவதை செய்தார்கள் என்பதை தாம் ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையும் கோடன் வைஸின் தகவலை மறுத்துள்ளார்.

கோடன் வெய்ஸ்சும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவராக இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையான கோடன் வெய்ஸ் 14 ஆண்டுகளுக்கு பின்னர், தமது ஐக்கிய நாடுகள் சபையின் பதவியை துறந்து வீடு சென்ற பின்னர் முதல் தடவையாக இலங்கை தொடர்பாக சுதந்திரமான தமது தகவலை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 31 டிசம்பர், 2009

முன்னாள் தாய்லாந்து பிரதமரை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை தயாராவதாக தகவல்!


தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வாத்ராவை, பொருளாதார ஆலோசகராக நியமிக்க இலங்கை அரசாங்கம், தயாராகி வருவதாக பேங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது. தக்சின் சின்வாத்ரா இலங்கையில் அரசியல் அடைக்கலம் கோரவுள்ளார் என வெளியான தகவலின் பின்னரே இந்த பொருளாதார ஆலோசகர் பதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தக்சின் சின்வாத்ரா ஏற்கனவே கம்போடியாவுக்கான பொருளாதார ஆலோசகராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தக்சின் சின்வாத்ரா, நிலவழக்கு ஒன்றில் இருவருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விஜயம் செய்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 2001ம் ஆண்டுமுதல் 2006ம் ஆண்டுவரை தாய்லாந்தில் பிரதமராக இருந்த வர்த்தகரான சின்வாத்ரா, இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். சின்வாத்ராவின் அரசாங்கம் ஊழல், மனிதஉரிமை மீறல் மற்றும் வன்முறைகளுக்குப் பெயர்போன அரசாங்கமாக விளங்கியது. இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அவரை பொருளாதார ஆலோசகராக ஏற்றுக் கொள்ளப் போகிறதா? எனப் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவை கேட்டபோது, அவ்வாறான முனைப்புக் குறித்து தமக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 23 டிசம்பர், 2009

அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோருவோரில் புலி உறுப்பினர்களும் உள்ளனர்:இலங்கை


அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களுள் 3 விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள் அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோரும் ஏனைய 255 பேரினது அகத் அந்தஸ்து கோரிக்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகார்த்தாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் சேனக வல்கம்பாய 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளார்.விடுதலை புலிகள் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களின் அடைப்படையில் இவ் முன்னாள் போராளிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள இவ்வறிப்பை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதுடன், அவுஸ்திரேலியா விடுதலை புலிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.