
'சன் சீ' என்ற படகில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சென்றிருந்ததாக தகவல் கிடைத்திருந்த போதிலும், எந்த நாட்டுக் கொடியுடன் குறித்த படகு பயணித்திருந்தது என்பது தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு தாம் அறிவித்திருப்பதாகவும் சேனக வலகம்பய தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் தமக்கு எந்தவித தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனவிரத்ன தெரிவித்தார்.
படகொன்றில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கனடாவை நோக்கி பயணித்திருப்பதாகவும், பின்னர் குறித்த படகு ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய ஊடகமொன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’