வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஆர். சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர். சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூலை, 2011

தமிழர் விரோத செயற்பாடுகளை நிறுத்தாவிடின் வட-கிழக்கு மக்களை அணிதிரட்டி நடவடிக்கை: சம்பந்தன்

Fதமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்ற அனைத்து தமிழர் விரோத நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
தவறினால் வடக்கு, கிழக்கு மக்களை அணிதிரட்டி அரசுக்கு எதிரான பிரசாரங்கள், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் அரசாங்கமும் தோற்கடிக்கப்படும். இதற்கு நானே தலைமையேற்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து த.தே.கூ மன்னாரில் பிரசாரக் கூட்டம்


ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இப்பிரசாரக் கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான நூர்தீன் மசூர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசைதாசன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட அனைத்து முக்கியஸ்தர்களும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் பொன்சேகாவுக்கு தமது ஆதரவினை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது