வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 மார்ச், 2010

பான் கீ மூனுடன் அரசாங்கம் எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை : வெளிவிவார அமைச்சர்


ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என வெளிவிவார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

புலிகளின் நடவடிக்கை குறித்து மாலை தீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என ரோஹித்த பொகொல்லாகம தெரிவிப்பு.


புலிகளின் நடவடிக்கைகள் குறித்து மாலைதீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அஹமட் ஷடீடை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு வேறும் வழிகளில் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வைற் கொலர் (கனவான்களைப் போன்று) சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள் வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

புதன், 17 பிப்ரவரி, 2010

நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஜனாதிபதியினால் கூட தடுத்து நிறுத்த முடியாது - வெளிவிவகார அமைச்சர்


நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஜனாதிபதியினால் கூட தடுத்து நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது மேற்கண்ட விடயங்களை தெரிவித்த அவர் நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் மட்டுமன்றி அண்டை நாடுகளிலும் இதே மாதிரியான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் உலக சமூகத்திற்கு போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுடன் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை எந்தவொரு தலைவரினாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.