"இலங்கை தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய சிறந்ததொரு இராஜதந்திரம் கொண்ட தலைவராக இருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை நாம் இழந்ததன் காரணமாக எமது இனத்திற்கு இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அயல்நாடான இந்தியாவினால் மதிக்கப்பட்டவராக இருந்தவர் அவர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற அமரரின் 21ஆவது சிரார்த்த தினவைபவத்தில் பேசியபோது கூறினார்.
-













