வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கைக்கு விஜயம் செய்வோர் பாதுகாப்பாக இருப்பதனை உணர வேண்டும் - பிரித்தானியா


லங்கைக்கு விஜயம் செய்வோர் பாதுகாப்பாக இருப்பதனை உணர வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதாக, வெளிநாட்டு பிரஜைகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானிய பிரஜையும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருமான குர்ஹாம் சாக்கீ கொலை விசாரணை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று குர்ஹாம் சாக்கீ தங்காலை பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இலங்கை அல்லது வேறும் நாடொன்றில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பது வெளிப்படையாக தென்பட வேண்டுமென ஜோன் ரான்கீன் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’