வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 மார்ச், 2013

'எனது கட்சியின் கதவுகள் சிகை அலங்கார நிலைய கதவுகளை போன்றதல்ல'


'எனது கட்சியின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து இருக்கும். ஆனால், அது ஏனைய கட்சிகளை போன்று சிகை அலங்கார நிலையத்தின் கதவுகளாக இருக்காது என, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'எங்களது கட்சியின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து இருக்கும். எமது கட்சிக்கான கொள்கைகளின் முக்கியத்துவம் தெரிந்த அனைவரினாலும் அதில் இணைந்துகொள்ள முடியும். ஆனால், எனது கட்சியின் கதவானது சிகை அலங்கார நிலையத்தின் கதவை போன்றது அல்ல. சிகை அலங்கார நிலையத்தில் விரும்பிய நேரத்தில் தொழிலை பெற்றுகொள்வதும் பின்பு வேறு ஒரு தொழிலை தேடிச் செல்லும் நிலையும் காணப்படுகின்றது. எமது கட்சி இத்தகைய கொள்கைகளை கொண்டதல்ல' என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’