வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 பிப்ரவரி, 2013

தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க ஐ.நா.விடம் வலியுறுத்துவோம்: நாராயணசாமி


லங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்துவோம் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2009 இல் இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவுன்சில் அனுப்பிய ஐ.நா தீர்மானங்களை இந்தியா ஆதரிக்கும். மீண்டும் கூடவுள்ள ஐ.நா கூட்டத்தில் ஐ.நா எடுக்கும் முடிவை இந்திய அரசு ஆதரிக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுக்கு எதிப்பு தெரிவித்த மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, விரைவில் கூடவுள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றிடக்கோரி ஐ.நாவுக்கு வேண்டுகோள் வைப்போம் என்று தெரிவித்தார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’