வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கவில்லை : ரணில்


பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க விவகாரம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஐ.தே.க. உறுப்பினர்கள் பங்கேற்பதற்கு ஒருபோதும் தான் தடைவிதிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில், பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான விவகாரம் தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு செல்வதை நான் தடுத்ததாக த ஹிந்து மற்றும் த பினான்ஸ் ஆகிய ஆங்கில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் எந்தவித அடிப்படையும் கிடையாது.அவை பொய்யான செய்திகளாகும் என தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’