வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 டிசம்பர், 2012

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: 6 பேருக்கு பிணை


ன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 சந்தேக நபர்களில் 06 சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸார் மற்றும் குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரினால் கட்டம் கட்டமாக 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்திலும், மன்னார் மேல் நீதிமன்றத்திலும் இடம்பெற்று வந்தன. அந்தவகையில் 6 சந்தேக நபர்களைத் தவிர ஏனைய அனைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும் குறித்த 6 சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு குறித்த 6 சந்தேக நபர்களும் ஒரு மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டுமெனவும் நீதிவான் உத்தரவிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’