வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 டிசம்பர், 2012

சீரற்ற காலநிலையால் 11 பேர் பலி: 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 ஆயிரத்து 202 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 11 பேர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காயமடைந்தும் 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. தொடரும் சீரற்ற காலநிலையால் ஹம்பாந்தோட்டை மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1515 குடும்பங்களைச் சேர்ந்த 7933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மாத்தளை மாவட்டத்தில் 1528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’