வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 நவம்பர், 2012

நித்தியானந்தா சீடர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்- மடத்தை அரசு எடுக்கிறது: மதுரை ஆதீனம்


சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் சீடர்களால் தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் புகார் கூறியுள்ளார்.
ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை இல்லை. ஆனால் அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது. மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார். போதுமான மின் உற்பத்தி இல்லாததால்தான் அவரால் மின்சாரத்தை கொடுக்க முடியவில்லை. பால்தாக்கரேயின் இழப்பு இந்து சமுதாயத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’