வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 அக்டோபர், 2012

பாலியல் தொந்தரவு குறித்த ஐ.நாவின் அறிக்கை ஆதாரமற்றது: அரசாங்கம்



பாலியல் தொழிலாளர்கள் இலங்கையில் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. ஆயினும் அரசாங்கம் என்ற வகையில் இந்த குற்றசாட்டுக்களை உதாசீனம் செய்யாது இந்த பிரச்சினை தொடர்பில் முழுமையாக ஆராயவுள்ளோம்' என அரசாங்கம் அறவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய றம்புக்வெல மேலும் கூறுகையில், 'பாலியல் தொழிலாளர்கள் இலங்கையில் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் என்ற ஐ.நாவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாலியல் தொழிலாளர்கள் தொந்தரவு செய்யப்படும் நாடுகளுள் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி கூட்டம், ஐ.நா சனத்தொகை நிதியம் ஆகியவை வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள 210 பக்கங்களை கொண்ட அறிக்கையில் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, பீஜிங்க, இந்தியா, கிரிபெட்டி, மியன்மார், நேபாளம், பப்புவா நியூகினியா தீவுகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. அநேகமாக ஆசிய நாடுகளில் விபச்சாரத்தை சட்டமாக்குதல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வழிவகைகள், பாலியல் தொழிலாளர்களை தலைமறைவாக தொழில் செய்ய வைப்பதால் எய்ட்ஸ் மற்றும் வேறு பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்துக்குள் அவர்களை தள்ளிவிடுகின்றது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆணுறைகளை கைப்பற்றி பொலிஸார் அதனை ஆதாரங்களாக பயன்படுத்துவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் அநேகமாக பாலியல் தொழிலாளர்கள் வீதிகள், சேரி வீடுகளை மையமாகக் கொண்டு தொழில் செய்கின்றனர். இதைவிட, களவாக இயங்கும் விபச்சார விடுதிகளும் உள்ளன. பல பாலியல் தொழிலாளர்கள் நடன கிளப்புகளில் வேலை செய்துகொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பாலியல் தொழிலாளர்களை புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைத்தல் என்னும் மிக மோசமான அணுகுமுறை சீனா, இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’