வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 அக்டோபர், 2012

சீரற்ற காலநிலை: நாடு முழுவதும் இதுவரை 49,788 பேர் பாதிப்பு



நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 13,074 குடும்பங்களைச் சேர்ந்த 49,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் முலட்டியான மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதென அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் 9 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வடக்கில் மாத்திரம் 35 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’