வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இலங்கை - இந்திய வெளியுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிடக்கூடாது: சு.சுவாமி



லங்கையுடனான இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
தமிழகம் வரும் சிங்களவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழக முதல்வருக்கு தோல்வி ஏற்படுமானால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசு தயங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள யாத்ரிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணிய சுவாமி, 'தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்;. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதை பின்பற்றுவதில் தோல்வி ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசு தயங்கக் கூடாது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்தியப் பிரதேச மாநிலம் செல்வதற்கு மதிமுக தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்ஷவின் வருகையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியது போல, மத்தியப் பிரதேசத்தில் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவரை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்று சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’