வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஜூன், 2012

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க உடன் நடவடிக்கை வேண்டும்: கருணாநிதி



லங்கை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை சிறைச்சாலையில் 160 நாட்களாக வாடும் தமிழக மீனவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினைக்காக ரூ.2 இலட்சம் வழங்கியதோடு கடமையை முடித்துவிட்டார். 5 மாதங்களுக்கு மேலாக யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் தரமான உணவோ, குடிநீரோ இல்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினையில் பிரதமரே தலையிட்டு தமிழக மீனவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும்' என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’