வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஜூன், 2012

அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு இலங்கை கடற்படையினரால் வழிமறிப்பு



வுஸ்திரேலியா நோக்கி சென்றுகொண்டிருந்த, மீன்பிடி றோலர் படகொன்றை நீர்கொழும்பில் வைத்து கடற்படையினர் வழிமறித்துள்ளனர். இப்படகில் 9 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதை இலக்காக கொண்டிருந்ததாகவும் கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இப்பயணத்தின்போது மேலும் பயணிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து ஏற்றப்படவிருந்ததாக கடற்படையினரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடற்படையினரின் அதிவேக தாக்குதல் படகொன்றின் மூலம் இப்படகு வழிமறிக்கப்பட்டது. இப்படகில் பெருந்தொகையான உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள், பயணிகளின் உடைமைகள் என்பன காணப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’