வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 9 ஜூன், 2012

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு



க்மன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியாவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரே பலியாகியுள்ளார்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹக்மன ஹெட்டியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சுனில் சாந்த சுந்தர என்ற நபரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார். இச்சந்தேக நபர் நேற்று அதிகாலை குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிடுவதற்காக சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுரிமையாளர் சந்தேக நபர் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போதே அவர் பலியாகியுள்ளார். வீட்டு உரிமையாளரிடமிருந்து துப்பாக்கியை சந்தேக நபர் பறிக்க முற்பட்டபோது அச்சமடைந்த வீட்டுரிமையாளர் சந்தேக நபரைச் சுட்டதாகச் சொல்லப்படுகிறது. பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹக்மன வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பலியான நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரென தெரிவிக்கப்படுகிறது. வீட்டு உரிமையாளர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியின் மூலமே சந்தேக நபரை சுட்டுக் கொன்றுள்ளார் எனத் தெரிவிக்கும் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’