வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 மே, 2012

யாழ் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியினை அமைச்சர் பார்வையிட்டார்



யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிப் பகுதியில் புதிதாக அமையப் பெற்று வரும் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன்போது கட்டுமானப் பணிகள் குறித்தும் அதிலுள்ள இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இதனிடையே அமையப் பெற்று வரும் நவீன சந்தைக்கான கட்டிடத் தொகுதியில் வியாபாரிகளினதும் பொதுமக்களினதும் போக்குவரத்து பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக நகரின் மையப் பகுதியில் இந்நவீன சந்தைக்கான கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’