வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 மே, 2012

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா



தா ய் வெளிநாடு செல்வதற்காக சகோதரியிடம் விட்டுச்செல்லப்பட்ட பிள்ளை சகோதரியின் கணவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை எனசல்மட, ஓவிலிகந்த பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சித்தியின் பாதுகாப்பிலிருந்த 8 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். வெளிநாடு சென்றிருந்த தாய் கடந்த 25ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். இந் நிலையில், கடந்த 29ஆம் திகதி சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’