வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 மே, 2012

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி த.தே.கூ. உண்ணாவிரதம்



மிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உடனடித் தீர்வை எட்டும்பொருட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனயிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வவுனியா நகர சபை விளையாட்டு மைதானத்தில் ஏறபாடு செய்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவத்துள்ளதாவது, "தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரித்து நிற்கின்றது. அவர்களுக்கு எமது ஆதரவினைத் தெரிவிக்கும் பொருட்டும், அவர்களது கோரிக்கைகளுக்குச் சர்வதேச ஆதரவினைத் திரட்டவுமே இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. கொழும்பு, மகசீன் சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, அனுராதபுரம், களுத்துறை, வவுனியா, கண்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 800க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பல நூறு பேர் எந்தவித விசாரணையும் இல்லாமல் ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போயுமுள்ளர். இது தொடர்பாக நாம் பல்வேறுமுறைகள் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். அரசியல் கைதிகள் பலமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயத்தில் அரசு சார்பாக அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கியும் கூட இதுவரை எதுவுமே நடக்கவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் பலர் அங்கவீனமுற்றவர்களாகவும், பல பெண்கள் திருமணம் முடித்து குழந்தை உள்ளவர்களாகவும் சிறைகளில் வாடுகின்றனர்;. பல இளைஞர்கள் குடும்ப பொறுப்பைச் சுமப்பவர்களாக உள்ளனர். இவர்களை எந்தவித விசாரணையுமின்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பதனால் அவர்களது முழு வாழ்க்கையுமே அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் கைதிகளின் விடுதலை பற்றி இலங்கை அரசு சிந்திக்காமல் இருப்பதானது வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதாகும். இந்த போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த அனைத்து உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களையும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும், காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும், தடுப்பிலுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சகல அரசியல் கட்சிகளையும், அனைத்துப் பொது அமைப்புக்களையும், பொதுமக்களையும் எம்முடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்திக்கொடுக்கும்படி வேண்டுகின்றோம்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’