வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மேலதிக அரிசி, மரக்கறிகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை



ற்போது நாட்டில் மிதமிஞ்சிய அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளதாகவும் கூடுதல் வருமானத்தை பெற்றுத்தரும் வகையில் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவு இதுவெனவும் அவர் கூறினார். 'மேலதிகமாகவுள்ள உணவுப் பொருட்களை பதப்படுத்தும் திட்டம் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. பொதுமக்களினால் வீட்டுத் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை காரணமாகவே அளவுக்கதிகமான உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலதிகமாகவுள்ள மரக்கறிகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மரக்கறி ஏற்றுமதியாளர்களிடம், அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’