வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 பிப்ரவரி, 2012

பிரிட்டனிலிருந்து இருந்து நாடு திரும்பிய பெண் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சடலமாக மீட்பு


கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர், 48 வயதான சுதர்ஷனி கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மற்றொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் இறுதியாக கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஒன்றாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலின் முதல் மாடியில் முதலாவது அறையில் இவர் தங்கியிருந்தார். இப்பெண் நபர் ஒருவரை திருமணம் செய்திருந்ததாகவும் அவரே மேற்படி பெண்ணுடன் ஹோட்டலில் காணப்பட்டார் என நம்பப்படுவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அந்நபர் கடந்த வியாழன் முதல் தென்படவில்லை. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’