வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஜனவரி, 2012

அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு கூட்டமைப்பினர் இந்தியா விஜயம் _


ன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியகூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையொன்றை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தாம் சந்திக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் கோரிக்கையொன்றை முன்வைத்ததையடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த விஜயத்தின்போது இந்திய உயர் அதிகாரிகள் பலரை கூட்டமைப்பினர் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’