வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஜனவரி, 2012

ஜனாதிபதி மஹிந்தவின் கருத்து புதியதொரு ஆரம்பம் : சுமந்திரன் எம்.பி.


13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் செல்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது புதியதொரு ஆரம்பமாகும். இங்கிருந்து நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் 'த இந்து' பத்திரிகைக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண அரசாங்கம் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதியின் அறிவிப்பையடுத்து அரசாங்கத்துடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’