வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஜனவரி, 2012

புலிகளுக்கு உதவிய வைத்தியர் தொழில்வாய்ப்பு கோருகிறார்


மிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்; ஒருவர் தொழில் நிமித்தம் வடக்கு லண்டனுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் நான்கரை வருடங்களாக அமெரிக்க சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் விநாயகமூர்த்தி முருகேசு என்ற வைத்தியர் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலை புலி அமைப்புக்கு பொருள் உதவியை வழங்கியமைக்காக சிறைத்தண்டனை பெற்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை மேற்படி வைத்தியர்; நிராகரித்துள்ளார். இவர் என்பீல்ட் என்னும் இடத்தில் உள்ள தனது வைத்தியசாலையில் மீண்டும் தொழில் செய்ய விரும்புவதாக பொதுமருத்துவ கவுன்ஸில் தெரிவித்துள்ளது. சிறையிலிருந்ததாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டதாலும் இவர் வைத்தியத் தொழில் தொடர்புக்கான ஆற்றலை இழந்துவிட்டார் எனவும் மருத்துவ கவுன்ஸில் கூறியுள்ளது. இந்த விசாரணை மேலும் தொடரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’