வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஜனவரி, 2012

அரசுடனான பேச்சுவார்த்தையில் புதிய ஆரம்பத்தை எதிர்பார்க்கும் த.தே.கூ.


திகாரப்பகிர்வு மற்றும் சுயாட்சி தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்துடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
'13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் செல்வது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது புதியதொரு ஆரம்பம். இங்கிருந்து நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். செவ்வாய்க்கிழமை முக்கியமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அரசாங்கத் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்கவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’