வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012

வந்தாறுமூலை கடலில் மூழ்கி ஒருவர் பலி


ட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள கடலில் இன்று திங்கட்கிழமை காலை நீராடியபோது ஒருவர் பலியாகியுள்ளார். வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளரான கே.சந்திரன் (வயது 40) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள கிருஷ்ணன் கோவிலில் திருப்பாவை விழாவின் இறுதிநாளான இன்று திங்கட்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. சுவாமி கடலில் தீர்த்தமாடிய பின்னர் ஏனையோர்கள் கடலில் நீராடியபோதே மேற்படி நபர் நீரில் மூழ்கிப் பலியானார். இவரது சடலம் தற்போது செங்கலடி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’