வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜனவரி, 2012

மலவாசலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்த முயற்சித்த சந்தேகநபர் கைது


ரு கோடியே 17 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மலவாசலில் மறைத்துக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என்றும் இவர் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, 35 இலட்சத்து 76ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை தாய்லாந்துக்கு கடத்த முயற்சித்த அந்நாட்டு பெண்ணொருவரையும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விமான நிலைய பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’