வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 டிசம்பர், 2011

பூப்புனித நீராட்டு விழாவில் பாலியல் துஷ்பிரயோகம்!


12 வயதான சிறுமி ஒருத்தி பருவ வயதை அடைந்ததனையடுத்து இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா தினத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கொக்கருல்ல, மெல்சிபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 19 வயதான இளைஞர் ஒருவர் ரம்படகல்லை மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்தச் சிறுமியின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த அவர்களின் குடும் நண்பரான சந்தேக நபர், குறித்த சிறுமியை அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’