வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 டிசம்பர், 2011

பொன்சேகா விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியாது: அனோமா


னநாயக தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், சரத்பொன்சேகாவின் விடுதலைப்பற்றி நடந்த பேச்சுவார்த்தை பற்றி தனது கணவருடன் பேசவுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று கூறினார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அடுத்த மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளபோதிலும் அவை வெறும் வதந்திகளே என பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்தார். 'எனக்கு இது பற்றி யாரும் கூறவில்லை. இது அநேகமாக வதந்தியாகவே இருக்கும்' என அவர் கூறினர். முன்னாள் இராணுவத் தளபதியின் விடுதலையையிட்டு கடந்த இரண்டு மாதங்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் பேசிவருவதாக டிரான் அலஸ் ஊடகங்களுக்கு அறிவிதத்தையடுத்து இந்த வதந்தி பரவியதாக அவர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு இட்டுச் செல்லுமா என கேட்டபோது, 'இதையிட்டு நான் எனது கணவருடன் பேச வேண்டும். அவரே இது விடயத்தில் என்ன நடக்கும் என்பதையிட்டு தீர்மானிப்பார்' என அனோமா பொன்சேகா பதிலளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’