வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 டிசம்பர், 2011

தோழர் றொபேட்டின் 54வது பிறந்த தினம் - சில நினைவுகள்


மீண்டும் புத்துயிர் பெறும் பாசிசம் ?

ன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது. சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் மேய்ப்பர்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள்.
சமூகத்திற்கு அறிவு தேவையில்லை என இவர்கள் கருதுகிறார்கள். புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கிபிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது. இதனால் இலங்கையில் தமிழர்களின் வாழ்வு மேலும் மேலும் மோசமடையும் நிலை தோன்றியுள்ளது. தீவிர இராணுவ மயமாக்கலையும், கலாச்சார, பொருளாதார ஆக்கிரமிப்புக்களையும் இச்சக்திகள் விரும்புகின்றன. மக்களின் சுதந்திரமான வாழ்வின் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இந்த நிலையில்தான் தன்னலமில்லாத ,சமூக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் அத்தகைய தலைவர்கள் எமது சமூகத்தில் அரிதிலும் அரிதாகிவிட்டர்கள் என்பதை அடித்துச் சொல்லமுடியும். ஒரு சில தலைவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை செவி மடுப்பவர்கள் சமூகத்தில் மிக மிகக்குறைவு. ஆனால் மேய்ப்பர்கள் குற்றுயிரான சமூகத்தை மரணிக்கச் செய்து வாழ முனைகிறார்கள். இந்த இடத்தில் தான் தோழர் சுபத்திரன் - ரஞ்சன் - றொபேட் இன் பங்களிப்பு உணரப்படுகிறது. நட்பும,; தோழமையும், ஜனநாயகமும், அஞ்சாமையும், அர்ப்பணமும் அவரது அருங்குணங்கள். புலிகள் கோலோச்சிய காலத்தில் 1997-2002 வரை யாழ் மாநகரசபையில் ஒரு உறுப்பினராக இருந்து கொண்டு மரண இருளில் வாழ்ந்து கொண்டு ஜனநாயகத்;தின் கூறுகளை இயங்குவிக்க சக உறுப்பினர்களுடன் சேர்ந்து முயற்சித்தவர். அன்றைய யாழ் மாநகர முதல்வர் செல்லன் கந்தையன் தலைமையில் (அரசினால் மறுநிர்மாணம் செய்யப்பட்ட) யாழ் நூலகத்தை திறப்பதற்கு சக உறுப்பினர்களுடன் சேர்ந்து முயன்றவர். ஆனால் அன்று அதனை இடிபாடுகளின் ஞாபகச் சின்னமாக வைத்திருக்க முயன்ற பாசிச வாதிகள் இன்று எதுவும் நடக்காதது போல் பாசாங்கு செய்கிறார்கள். இவர்கள் யாழ் நூல் நிலையத்தின் கேட்போர் கூடத்தையும் தமது நஞ்சுவார்ப்பு நோக்கங்களுக்கு பயன்படுத்த தயங்கியதில்லை. இன்று மக்களின் மீள் குடியேற்றம் பற்றி வாய் கிழியப்பேசும் பலர் மானசீகமாக ஆஸ்பத்திரியையும் வீடுகளையும் நூல் நிலையங்களையும் வீதிகளையும், இடிபாடுகளாக குண்டும் குழியுமாகவும் வைத்திருக்க விரும்பியவர்கள். வடக்கு கிழக்கு ஒரு சுடுகாட்டு காட்சி கூடமாக இருக்க வேண்டும் அதில் தமது பிழைப்பு நடக்க வேண்டும் என்று அங்கலாய்த்தவர்கள். இன்று யாழ்ப்பாணத்தில் டாக்டர்களாக இருக்கும் சிலர் யுத்தத்திற்கு பிந்திய சூழலில் சௌகரியமாக வசதிகளுடன் வடிவமைக்கபட்ட தனியார் மருத்துவ நிலையங்களில் தொழில் செய்பவர்கள் பல ஆயிரம் ரூபாக்களை மக்களிடம் அறவிடுபவர்கள். இவர்களுடன் ஒரு சில பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், ஆசிரியர்களும் வங்கி அதிகாரிகளும், சட்டத்தரணிகளும் அடக்கம். இன்று தேசியத்தின் செம்மல்களாக போலி நாடகம் ஆடுகிறார்கள். மக்களின் அதிகாரத்தை புலியிச எதேச்சாதிகார பாணியில் தமது கைகளில் எடுக்க முனைகிறார்கள். மதங்கொண்ட மதம் ஒருவித போதைவஸ்து. அது இலங்கையின் பௌத்த பீடாதிபதிகளுக்கு மாத்திரமல்ல எமது சில வணபிதாக்களுக்கும், மகாசன்னிதானங்களுக்கும், சிவநெறிச் செம்மல்களுக்கும் கூட பொருந்தும். மக்களின் மத நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்து ஜனநாயக விரோத பாசிசத்தின் கூறுகளை விதைக்க முனைகிறார்கள். மதத்தை அரசியல் அதிகாரமாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை பொம்மைகளாக்கவும் முயல்கிறார்கள். இரத்தமும் சதையுமாக சமூக நிலைமைகளை அனுபவ ரீதியாக அறிந்தவர்களுக்கு, உணர்ந்தவர்களுக்கு தேசியம் சுயநிர்ணய உரிமை பற்றி இவர்கள் போதிக்க முற்பட்டிருக்கிறார்கள். மற்றவர்களை உதிரிகள் என்னும் இவர்களை தற்குறிகள் என்று கூறுவதில் எனக்கு எந்த மனக்கிலேசமும் இல்லை. இவர்களும் இவர்களது கருத்தியல் ஆசான்களும் தான் படுகொலை அரசியலுக்கு நியாயம் சொன்னவர்கள். இரண்டு தலைமுறைகளின் அழிவுக்கு இவர்களும் பொறுப்பாளிகள் . தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று சொல்ல முற்;பட்டிருக்கிறார்கள். அதாவது வரும் மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றக் கூடாது என்று . சரியோ பிழையோ தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு ஆணையிடுபவர்களின் அறிக்கையில் ஜனநாயக விரோத பாசிசத்தின் வாசனை அடிக்கிறது. இன்னின்னாரெல்லாம் தீண்டத் தகாதவர்கள் என்கிறார்கள் . தோழர் றொபேட் ஜனநாயகத்தின் பால் அவருக்கிருந்த அக்கறைக்காகவே அவர் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். இவ்வாறு பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள் . பலருடைய அர்ப்பணிப்பில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டியிருந்தது. ஜனநாயகத்தை முழுமை பெறச்செய்யும் பணியில் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இராணுவ மயமாக்கல் கலாச்சார ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் பாசிச அரசியலின் சாயலிலிருந்தும் விடுபட வேண்டும் அதற்கு குறைந்த பட்சம் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான அர்த்த பூர்வமான அரசியல் அதிகார அலகுகள் வேண்டும். பல்லின சமூக நாடாக இலங்கை மாறுவது மாத்திரமல்ல. அநீதியான சமூக அமைப்பு எல்லாவற்றிலுமே தீவிரமான மாற்றங்கள் தேவை. தோழர் றொபேட் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும், பாசாங்கு தனங்களுக்கும் எதிராகவே செயற்பட்டார். கலை இலக்கிய ஈடுபாடும் அவரிடமிருந்தது. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை விளங்கிக்கொள்ள முற்பட்டவர். சோவியத் யூனியனின் வீழ்சிக்கு பின்னரான உலக நிலைமைகள் பொதுவுடைமை இயக்கத்தின் எதிர்காலம், இயக்கவியல் பற்றிய விவாதங்களில் ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவர். 1980களின் நடுப்பகுதியில் அவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள.; அவரின் நேர்மை, வசீகரம், ஆளுமை, கவித்துவம் எனபன இயல்பாகவே அதனை ஏற்படுத்தியிருந்தன. பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா -பாரதி தோழமையுடன் சுகு-ஸ்ரீதரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’