வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 நவம்பர், 2011

சவூதியில் தொடரும் கொடூரம்


வூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற மற்றுமொரு இலங்கைப் பெண்ணின் உடலிலிருந்து 7 கம்பித் துண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அராப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியான பாலசுப்பிரமணியம் சசிகலா என்ற பணிப்பெண்ணை உடல் வருத்தம் எனக் கூறி அவரது வீட்டு உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை தம்மான் மத்திய வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த இளம் யுவதியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அவரது உடலிலிருந்து 7 கம்பித் துண்டுகளை மீட்டுள்ளனர். குறித்த பெண்ணைப் பார்வையிட ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு சவூதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளருடைய மனைவி தனக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டதாகவும் என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் இலங்கைப் பணிப்பெண்ணான சசிகலா ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி தான் வேலைக்கு வந்தது தொடக்கம் வீட்டு எஜமானி தன்னைத் துன்புறுத்திவருவதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று விசாரணைக்கென பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். விசாரணைகள் முடியும் வரை இலங்கைப் பணிப்பெண் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என அராப் செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’