வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 நவம்பர், 2011

எக்னெலிகொட தொடர்பான உண்மை தகவல் விரைவில் வெளியிடப்படும்: அரசு


சுயாதீன ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத் எக்னெலிகொட வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார் என்ற செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அவர் தொடர்பான உண்மைத் தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எக்னெலிகொடவின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் முன்னாள் நீதியரசரும் அரசாங்கத்தின் ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்த கருத்துக்கு அரசாங்கம் பொறுப்புவாய்ந்த நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால் இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவையின் திர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதன்போது எக்னெலிகொட தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலெயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’