வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 அக்டோபர், 2011

மதுரை பாலத்தின் அடியில் வெடிகுண்டு மீட்பு: அத்வானியை கொல்லத் திட்டம்?


ந்தியாவின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியை இலக்கு வைத்து மதுரைக்கு அருகில் பாலமொன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் வெடிகுண்டொன்றை தமிழக பொலிஸார் கைப்பற்றி செயலிழக்கச் செய்துள்ளனர்.
ஜன் சேட்னா யாத்ரா மேற்கொண்டு, தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எல்.கே.அத்வானி, விருது நகர் மாவட்டத்pன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லும் வழியில் மதுரையிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள திருமங்கலத்தின் ஆலம்பட்டி எனும் கிராமத்திலுள்ள மேற்படி பாலத்தை கடந்து செல்லவிருந்தார். இந்நிலையில் கிராமவாசியொருவர் கொடுத்த தகவலையடுத்து பாலத்தின் அடியிலிருந்த வெடிகுண்டு மீட்கப்பட்டது. குண்டு பொருத்தப்பட்ட 6 அடி நீளமான குழாயொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த குண்டுடன் வயர் மூலம் இணைக்கப்பட்ட பற்றரியொன்றை அரைக்கிலோமீற்றர் தொலைவிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வெடிகுண்டு மீட்கப்பட்டதையடுத்து, அத்வானியின் பயணப்பாதை மாற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’