வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

உலகத்துக்கு இலங்கை முன்னுதாரணமாக விளங்குகிறது: ஜனாதிபதி

ருபது மாதங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10,000 பேருக்கு தான் புனர்வாழ்வுடன் திறன் அபிவிருத்தி பயிற்சியளித்தன்மூலமாக புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்பனவற்றில் இலங்கை உலகத்துக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் 1800 முன்னாள் உறுப்பினர்களை சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடந்த நிகழ்வில் பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். வேறு நாடுகளில் புனர்வாழ்வுத்திட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததாகவும் அவர் கூறினார். 'எமது புனர்வாழ்வு திட்டத்தை பல உள்ளூர் குழுக்களும் சர்வதேச குழுக்களும் மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த திட்டத்தை ஆதரிப்பதற்காக அவர்கள் இதை செய்யவில்லை. இதில் எங்கே பிழை காரணலாம் அதை வைத்துக்கொண்டு இதை எவ்வாறு குழப்பலாம் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இன்று தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்ட 1800 இளைஞர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். இது பெரும் ஆறுதல் தரும் விடயம் என ஜனாதிபதி கூறினார். 'நீங்கள் உங்கள் கிராமம் முற்றுமுழுதாக மாறியிருப்பதை காண்பீர்கள். மூன்று நான்கு வருடங்களுககு முன்னர் உங்கள் பெற்றோரின் எதிர்ப்பையியும் மீறி எல்.ரி.ரி.ஈயினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அப்போது இருந்த நிலைமையிலிருந்து வேறுபடும் சூழநிலை நீங்கள் அங்கு காண்பீர்கள். உங்கள் நகரம் அல்லது கிராமம் அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி திட்டத்தில் இணைந்துள்ளது. காபற் வதி மின் கம்பிகள், வங்கிகள், தொழிற்சாலைகள் அங்கு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த அபிவிருத்தியில் நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள்' என அவர் இளைஞர்களிடம் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’