வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

மருத்துவர் சுட்டுக்கொலை: கரந்தெனிய பகுதியில் பதற்றம்

மோ ட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவரால் 40 வயதான மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து பொலிஸாரும் பொதுமக்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோக சம்பவ இடத்திற்கு பொலிஸார் தாமதமாக வந்தமையாலேயே இப்பதற்ற நிலை ஏற்பட்டது. ஆத்திரமுற்ற மக்களை கட்டுப்படுத்துவதற்கு பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. போரகந்த அரசினர் வைத்தியசலையைச் சேர்ந்த மருத்துவர் அவரின் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இம்மருத்துவர் தனது சேவையால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் எனவும் பல சந்தர்ப்பங்களில் அவர் நோயாளிகளிடம் பணம் அறவிடுவதில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’