வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 ஜூன், 2011

கரீனாவை விட்டு விளகும் சைப் அலிகான்

பா லிவுட் ஜோடி கரீனா கபூர்- சைப் அலிகானின் 4 வருட காதலில் உரசல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் டாப் ஹீரோயின் கரீனா கபூர், ஹீரோ சைப் அலிகான் ஜோடி கடந்த 4 வருடமாக காதலித்து வருகிறது.


வெளிநாடுக்கு சென்றாலும், விழாக்களுக்கு சென்றாலும் இவர்கள் ஜோடியாக செல்வது வழக்கம். இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது சகஜம். ஆனால் சமீபகாலமாக வாக்குவாதமும் மோதலும் அதிகரித்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இருவரும் ஜோடியாக இருக்கும் நேரம் குறைந்து போனதுதானாம். இரவு, பகல் என்று எந்நேரமும் கரீனா ~_ட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதே நேரம் ~_ட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவருடன் பொழுதை கழிப்பதை சைப் அலிகான் விரும்பவில்லையாம்.
சொந்த நிறுவனம் சார்பாக பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சைப் 7 நாடுகளில் இப்பட ~_ட்டிங் நடப்பதால் பைனான்ஸ் பிரச்சினை சம்பந்தமாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் 'பாடிகாட்" ~_ட்டிங்கிலிருந்து ஒருமுறை சைப்பிடம் செல்போனில் பேசிய கரீனா, கதறி அழுததாக தயாரிப்பு உதவியாளர் ஒருவர் தெரிவித்து;ளளார். மேலும் தீபிகா படுகோனுடன் சைப்புக்கு புதிதாக நட்பு ஏற்பட்டிருப்பதும் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி கரீனாவிடம் கேட்டபோது, நாளை மறுதினம் லண்டன் புறப்படுகிறேன் எனவும் அங்கிருந்து சைப்புடன் சேர்ந்து பாரீஸ் செல்கிறேன் எனவும் எங்களுக்குள் நடக்கும் விடயங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சூடாக பதில் அளித்திருக்கிறார். கரீனா நெருங்கி வந்தாலும் சைப் ஒதுங்கியே செல்வதாகவும் விரைவில் இவர்கள் பிரிவார்கள் என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’