வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 ஜூன், 2011

6 மாதத்திற்கு கப்பல் சேவை தொடர்ந்தால் தூக்கில் தொங்கி உயிரை விடுவேன்: சீமான்

லங்கை இந்திய கப்பல் சேவையை ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும், நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன் என நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டிவிட்டு பின்னர் நிறுத்திவிடும்.
தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டிக் காட்டட்டும் நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’