வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 ஜூன், 2011

ஜூலையில் ஆப்கானில் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் வாபஸ்: ஒபாமா அறிவிப்பு

ப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படையில் இருந்து 10 ஆயிரம் வீரர்கள் வரும் ஜூலை மாதம் வாபஸ் பெறப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் அல்கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை அடக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. ஒபாமா அமெரிக்க அதிபரானபோது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதன்படி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான வீரர்க்ள் நாடு திரும்பினர்.

தற்போது வரும் ஜூலை மாதம் மேலும் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறப்போவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஆப்கானிஸ்தான் நிலைமை முன்னேற்றி வருவதால் இனி அங்கு அமெரி்ககப்படைகள் அதிக அளிவல் தேவைப்படாது. எனவே, அங்குள்ள படையின் பெரும் பகுதியை வாபஸ் பெறவிருக்கிறோம். இதில் முதல்கட்டமாக வரும் ஜூலை மாதம் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 23 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவர். இது தவிர 63 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து அங்கேயே இருப்பார்கள். அவர்கள் வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவார்கள். அமெரிக்கப்படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு படைகள் கவனித்துக் கொள்ளும்.
பின்லேடன் மறைவிற்கு பிறகு வலுவிழந்து, நெருக்கடியில் இருக்கின்றபோதிலும் அல்கொய்தா ஆபத்தானதாகத் தான் உள்ளது என்றார்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கப்படைகளில் இதுவரை ஆயிரத்து 500 பேர் உயிர் இழந்துள்ளனர், 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த படைகளுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும் செலவு 4 ஆயிரம் கோடி ஆகும். இது அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் தான் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’