வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 மே, 2011

கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் யுத்த வெற்றி விழா; 8,200 படையினர் பங்கேற்பு

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட யுத்த வெற்றி விழாக் கொண்டாட்ட பிரதான நிகழ்வு கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.

மழைக்கு மத்தியில் இடம்பெற்று வரும் இந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்திற்கான படையினர் அணிவகுப்பு மரியாதையினை மேஜர் நந்தன உடவத்த தலைமையில் 8,200 முப்படையினர், பொலிஸார், பொலிஸ் அதிரடிப்படையினர் கலந்து சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் குடும்பத்தார், பிரதமர், சபாநாயகர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முப்படைத்தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’