வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 ஏப்ரல், 2011

இளவாலையில் வீடு புகுந்து இளம் யுவதிக்கு நேற்றிரவு அசிட் வீச்சு

ளவாலை அகஸ்தியர் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்றிரவு 9 மணியளவில் புகுந்த இனந்தெரியாத இரு நபர்கள் அங்கிருந்த யுவதி மீது அசிட் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஏ.லொறின் கொன்சென்ற் (வயது25) என்பவரே காயமடைந்தார்.

இச் சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது:

பிரஸ்தாப இளம் பெண் வீட்டில் இரவு உணவை உட்கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் நுழைந்த இருவர் பிரஸ்தாப பெண் மீது அசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பிரஸ்தாப யுவதியின் உடலில் பல இடங்களில் அசிட் தாக்கத்தால் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் இருந்த ஏனையவர்களைத் தவிர்த்து குறித்த யுவதியை இலக்கு வைத்தே அசிட் வீச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
யாழ். இளவாலைப் பகுதியில் தன்னை காதலிக்க மறுத்த இளம் யுவதியின் முகத்தில் அசிட் ஊத்திய காதலன் தலைமறைவாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளவாலையிலுள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்ற மேற்படி காதலன் அப்பெண்ணின் முகத்தில் அசிட் ஊத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
ஏ.லொறின் கொன்சென்ற் (வயது 25) என்பவரே அசிட் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரஸ்தாப யுவதியின் உடம்பின் பல பகுதிகளிலும் அசிட் தாக்கத்தினால் எரிகாயங்கள் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து யுவதியின் பெற்றோரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காதலனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’