வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மார்ச், 2011

அம்பாறை தமிழர் மகா சபை தலைவர் மீது மாகாண சபை உறுப்பினர் தாக்குதல்

ம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் எஸ். கல்யாணசுந்தரம் மீது இன்று முற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்று அளிகம்பை நோக்கி தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோதுகண்ணகி புரம் பிரதேசத்தில் வழிமறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கிழக்கு மாகாண சபையின் மற்றொரு உறுப்பினர். கே.கிருஷ்ணானந்த ராஜா தெரிவிக்கிறார்.
தனது நெஞ்சுப் பகுதியில் கடுமையாக காயமடைந்த கல்யாணசுந்தரம். அக்கரைப்பற்று ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’