அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகரின் மனைவி மரியா ஷ்ரீவருடன் 2006 ஆம் ஆண்டு கலந்துரையாடியபோது சோனியா காந்தி இதைத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸினால் புதிதாக வெளியிடப்பட்ட ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு தான் பிரதமராக பதவியேற்காதமை தொடர்பான முழுக்கதையையும் என்றாவது தான் எழுதுவார் எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மரியா ஷ்ரீவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றபோது அவர் சோனியா காந்தியை சந்தித்த வேளையிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
1984 முதல் 1989 வரை இந்திய பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபட்டதை தான் விரும்பவில்லை எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
அதேவேளை தான் அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசித்த போது எத்தகைய தீர்மானம் மேற்கொண்டாலும் தனக்கு ஆதரவு வழங்குவதாக தனது பிள்ளைகள் தெரிவித்தனர் என சோனியா காந்தி கூறியுள்ளர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’