வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 டிசம்பர், 2010

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதிரியார் மீது கைதிகள் தாக்குதல்

சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகி வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மன்னார் பாதிரியார் மீது கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிஸார் விரைந்து சென்று வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து அதிகாரிகளுடன் சிறைச்சாலை கட்டிடத்தினுள் நுழைந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு ஏற்பட்ட மோதலினால் கைதிகள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்களம் மேற்கொள்கின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’